மௌனத்தில் அவளை நினைத்திருப்பான்
அவனே அவனுக்கு எதிரி.
நினைத்திருக்கும் அவனுக்கு மௌனத்தை தருவாள்
அவளே அவனுக்கு தோழி.
இங்கு ஒரு பார்வை மட்டும் இருக்குமே
ஆனால் இரண்டு கண்களும் அவனது.
இவை மூவர் மட்டும் அரிந்தது
இருந்தும் நான்கு கண்களும் சந்திப்பதில்லை.
சூரியனும் சந்திரனும் தனக்கு துனை
என்று அவள் வைத்தவை.
பகலினிலும் இரவினிலும் அவளே வெளிச்சம்
என்று அவன் புரிந்தவை.
செல்லும் பாதையை அவன் அரிய மாட்டான்
சிந்தனை எல்லாம் அவளே.
அறிந்த அவளும் அவனிடம் செல்லமாட்டாள்
சிந்தனை எல்லாம் தன்னிடமே.
இருவருக்கும் உண்டு புன் பட்ட மனது
கதையின் முடிவை நினைத்துக்கொண்டு.
ஒருவருக்கு உண்டு புன் பட்ட உடல்
கதையின் முடிவை நெருங்கும் அவளுக்கு…….
கவலைகளை நினைப்பது வாழ்வின் சூல்ச்சி
இதுவரை நீங்கள் படித்ததுப்போல்.
சந்தோஷத்தை நினைப்பது அன்பின் வெற்றி
இக்கதையை நீங்கள் முடிப்பதுப்போல்.

